12.12.13

யுஜிசி கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிபதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.யுஜிசி சார்பில் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் இளநிலைப் பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்களிடமிருந்து 2013-15 ஆம் ஆண்டு கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இதற்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 22 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபோல், ஒரு குடும்பத்தில் வேறு எந்தக் குழந்தைகளும் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தையாகவோ அல்லது இரட்டை பெண் குழந்தைகளாகவோ பிறந்து, 2013-14 கல்வியாண்டில் நேரடி முதுநிலை பட்டப் படிப்பு முதலாம் ஆண்டில் சேர்ந்திருப்பவர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு டிசம்பர் 9 கடைசித் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த இரண்டு கல்வி உதவித் தொக்கும் விண்ணப்பிபதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து யுஜிசி உத்தரவிட்டுள்ளது.விண்ணப்பங்களை www.ugc.ac.in  என்ற யுஜிசி இணைய தளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment