7.12.13

அம்பேத்கரின் 57-வது நினைவு தினம்


டாக்டர் அம்பேத்கரின் 57-ஆவது நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அவருடைய உருவச்சிலைக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உள்ள அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாநிலத் தலைவர் ஞானதேசிகன், மூத்தத் தலைவர் குமரிஅனந்தன், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக:சென்னை புழலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சி.எச். சேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாமக:விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்ட பா.ம.க. தலைவர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதிமுக: சென்னை புழலில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா, திருவள்ளூர் மாவட்டச் செயலர் டி.ஆர். செங்குட்டுவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பா.ஜ.க. எஸ்.சி. அணி மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை துறைமுகத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச்சிலைக்கு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment