7.12.13

லிபியாவில் அமெரிக்க ஆசிரியர் சுட்டுக் கொலை

பள்ளி விடுமுறையையொட்டி லிபியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த அமெரிக்க ஆசிரியர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வியாழக்கிழமை அதிகாலை நடைபயிற்சி சென்ற 33 வயதுடைய ரோன்னி ஸ்மித் என்ற அந்த ஆசிரியர், பெங்காசி நகரின் கிழக்குப் பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். விடுமுறை முடிந்து இன்னும் ஒரு வாரத்தில் ஸ்மித் அமெரிக்க திரும்ப இருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தால், மற்றொரு அமெரிக்க ஆசிரியரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளதாக பெங்காசி சர்வதேச பள்ளி இயக்குனர் மன்சூரி தெரிவித்துள்ளார். கடந்த 15 மாதங்களுக்கு முன் லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment