7.12.13

துருவ நட்சத்திரத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன்? கவுதம் மேனன் விளக்கம்


கவுதம் மேனன் டைரக்ட் செய்ய இருந்த துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்திலிருந்து திடீரென சூர்யா விலகினார். இது தொடர்பாக அப்போது அவர் விடுத்த அறிக்கையில் “கவுதம் எனக்கு திருப்தி தரும் கதையை தரவில்லை.
இனிமேலும் காத்திருக்க முடியாது. அதனால் இருவரும் இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நான் துருவநட்சத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இப்போது சூர்யா லிங்சாமியின் படத்தில் நடித்து வருகிறார். கவுதம் மேனன் சிம்புவை வைத்து அடுத்த படத்தை துவக்கி விட்டார். அவசர அவசரமாக தொடங்கப்பட்ட இரண்டு படத்திற்கும் இன்னும் பெயர் வைக்கவில்லை. சூர்யா விலகிக் சென்றது பற்றி இதுவரை கருத்து சொல்லாத கவுதம் முதன் முறையாக அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: சூரியாவோடதான் அடுத்த படமுன்னு முடிவு பண்ணினேன். சூர்யாவும் “ஒகே கதை சொல்லுங்க சேர்ந்து பண்ணுவோம்”னு சொன்னார். நான் முதல்ல சொன்ன கதை அவருக்கு பிடிக்கல. “அடுத்த கதைக்கு போகலாமே”ன்னு சொன்னார். அதுவும் அவருக்கு பிடிக்கல. கடைசியா துருவ நட்சத்திரம் கதை சொன்னேன்.
அவரும் அதற்கு சம்மதித்தார். அதனால் மற்ற வேலைகளை ஆரம்பிச்சேன். ஹீரோயின் த்ரிஷா. முக்கிய கேரக்டரில் பார்த்திபன், ஒளிப்பதிவாளர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் மேக் ஆர்தர், இசை ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாமே முடிவு பண்ணியாச்சு.
ஷூட்டிங் கிளம்புற அன்றைக்கு காலையில் “இது எனக்கு வேண்டாம்”னு அறிக்கை விட்டார். ரொம்ப அப்செட் ஆனேன். அவரை சந்திச்சு என்ன பிரச்னைனாலும் நாமே பேசியிருக்கலாமே எதுக்கு அறிக்கைலாம் என்று கேட்டு விட்டு வந்தேன்.
இரண்டு பேரும் ப்ராஜக்ட் பற்றி பேச ஆரம்பிச்சதிலிருந்தே அது என்ன? இது என்ன? என்று நிறைய கேள்விகள். அப்போது என் மனசுல தோன்றினதுதான் கடைசியா நடந்துச்சு.
ஏற்கெனவே விண்ணை தாண்டி வருவாயா பார்ட் 2 பற்றி சிம்புகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அந்த தொடர்புல அடுத்த படத்தை அவரோட ஆரம்பிச்சிட்டேன். ஆனால் இது விண்ணை தாண்டி வருவாயா -2 இல்லை. வேற காதல். வேற களம். ஏ.ஆர்.ரஹ்மான், டான் மேக் ஆர்தர்கிட்ட வாங்கின கால்ஷீட்டை இதுல பயன்படுத்திக்கிட்டேன்.
அடுத்து அஜீத் படம். பக்காவன ஆக்ஷன் ஸ்கிரிப்ட் பிப்வரி 15 லேருந்து ஷூட்டிங் கிளம்புறோம். என்ன நடந்திருந்தாலும் இப்பவும், எப்பவும் சூர்யா என் நண்பன்தான்.
இவ்வாறு கவுதம் மேனன் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment