7.12.13

சஞ்சய் தத்துக்கு ஒரு மாத பரோல்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு மாத கால பரோல் வழங்கப்பட்டிருப்பதாக புணே மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத் தனக்கு பரோல் வழங்கக் கோரி புணே வட்டாட்சி ஆணையர் பிரபாகர் தேஷ்முக்கிடம் விண்ணப்பித்திருந்தார்.
இது குறித்து பிரபாகர் தேஷ்முக், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ""சிறை அதிகாரிகள் அளித்த பரிந்துரையின்படி சஞ்சய் தத்துக்கு ஒரு மாத கால பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நடைமுறைகளை முடித்த பின் அவரை பரோலில் விடுவிப்பதற்கான தேதி முடிவு செய்யப்படும்'' என்றார்.
எனினும், சஞ்சய் தத்துக்கு பரோல் அளித்ததற்கான ஆணை, வட்டாட்சி ஆணையர் அலுவலகத்திடம் இருந்து இன்னும் வந்து சேரவில்லை என்று சிறைத்துறை டிஐஜி ஆர்.தாம்னே தெரிவித்தார்.
இந்த ஆணை வந்து சேர்ந்தால் சஞ்சய் தத்தை சனிக்கிழமையே பரோலில் விடுவிக்க முடியும் என்று எரவாடா சிறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

No comments:

Post a Comment