21.12.13

ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்

ஆந்திர மாநிலம் ஹைதராபாதிலுள்ள ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள் கடத்த முயன்ற மூன்று பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரிலிருந்து தனியார் விமானம் மூலமாக ஹைதராபாத் வந்த ஹசி முகமது, ஜீயாவுதின் மற்றும் சொக்கலிங்கம் என்ற அந்த மூன்று நபர்களிடம் இருந்து ஒரு கிலோ எடையுள்ள 18 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment