21.12.13

பெட்ரோல், டீசல் விலை உயர்வு



சில்லறை எரிபொருள் விற்பனையகங்களுக்கான கமிஷனை மத்திய அரசு அதிகரித்ததையடுத்து, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 41 பைசாவும், டீசலின் விலை லிட்டருக்கு 10 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்கள் காரணமாக சில்லறை எரிபொருள் விற்பனையகங்களுக்கான வருடாந்திர கமிஷன் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கமிஷனை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டதால் இந்த விலையுயர்வு ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் 10-ஆம் தேதி சமையல் எரிவாயு சில்லறை விற்பனையாளர்களின் கமிஷனை மத்திய அரசு அதிகரித்ததன் காரணமாக சிலிண்டரின் விலை ரூ.3.50 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment