21.12.13

காங்கிரஸ் - லாலு கூட்டணி குறித்து கவலையில்லை: நிதிஷ்குமார்

காங்கிரசுடன், ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி குறித்து  கவலையில்லை என்று பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.
அகில இந்திய கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது,காங்கிரஸ் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி ஏற்கெனவே இருந்து வருகின்றது. தற்போது தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு, தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசியுள்ளார்.  அவர்களது கூட்டணி குறித்து கவலைப்படவில்லை என்று நிதிஷ்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment