21.12.13

ரயில்வே ஊழியர்களிடம் வாக்கெடுப்பு

முப்பத்தாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுவேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக, ரயில்வே ஊழியர்களிடம் ரகசிய முறையில் கருத்துக் கேட்பதற்கான வாக்கெடுப்பு விழுப்புரம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
லார்சஸ் திட்டத்தின்கீழ் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களின் வாரிசுகளுக்கும் வேலை, ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக கருத்துக் கேட்கும் வகையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சிக் கோட்டத் தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரயில்வே ஊழியர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்குகளைப் பதிவு செய்தனர்.
சின்னசேலம்: இதேபோல சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் எஸ்.ஆர்.எம்.ஏ. தொழிற்சங்க செயலாளர் வே.வெங்கடாசலம், தொழிற் சங்க உதவி செயலாளர் ஏ.ராஜா உள்ளிட்ட ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment