27.12.13

இலங்கையில் தமிழக மீனவர்கள் 171 பேரின் காவல் நீட்டிப்பு


இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 171 பேரின் காவல் ஜனவரி 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தமிழக மீனவர்களின் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து இலங்கையில் உள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களது காவலை ஜனவரி 6ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தற்போது 227 தமிழக மீனவர்கள், 77 விசைப் படகுகளுடன் இலங்கை அரசின் பிடியில் உள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களில் இலங்கையைச் சேர்ந்த 213 மீனவர்கள், 40 விசைப் படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் தமிழகத்தில் மட்டும் 170 இலங்கை மீனவர்களும், 32 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மீன் வளத்துறை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

No comments:

Post a Comment