27.12.13

பயணி தவறவிட்ட ரூ.1.85 கோடியை ஒப்படைத்த ஓட்டுநர்

அமெரிக்காவில் பயணி தவறவிட்ட 3 லட்சம் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.85 கோடி), நேர்மையான வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர் திரும்ப ஒப்படைத்துள்ளார்.
நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் பகுதியில், கெரார்டோ காம்போயா என்பவர் வாடகைக் கார் ஓட்டி வருகிறார்.
இவரது காரில் திங்கள்கிழமை ஏறிய பயணி ஒருவர், தான் கொண்டு வந்திருந்த பணப்பையை விட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து பணப்பையைக் கண்டறிந்த கெரார்டோ காம்போயா, அதை தனது வாடகைக் கார் நிறுவனத்தில் ஒப்படைத்தார்.
இந்நிலையில் பணப்பையைத் தொலைத்தவரைக் கண்டறிந்து, வாடகைக் கார் நிறுவனம் திரும்ப ஒப்படைத்தது. மேலும், ஓட்டுநர் கெரார்டோ காம்போயாவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு 1,000 டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.61 ஆயிரம்) வாடகைக் கார் நிறுவனம் பரிசாக வழங்கியது என்று "லாஸ் வேகாஸ் சன்' நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment