27.12.13

மதுரையில் 40 குவாரிகளுக்கு சவுடு மண் உரிமம் திடீர் ரத்து

மதுரை மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சவுடு மண் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் கனிமவளத் துறையால் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 பட்டா நிலம் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் இருந்து சவுடு மண் எடுக்க 40-க்கும் மேற்பட்டோருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு காரணங்களைக்கூறி இந்த உரிமம் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உரிமதாரர்களுக்கு கனிமவளத் துறையிடம் இருந்து அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக உரிமதாரர்கள் தரப்பில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வியாழக்கிழமை முறையிட்டுள்ளனர். இருப்பினும் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது தொடர்வதாக உரிமதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment