27.12.13

இன்று வீடு திரும்புகிறார் இளையராஜா?


இசையானி இளையராஜா இன்று மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 23ம் தேதி இசைஞானி இளையராஜா நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய÷இதயத் துடிப்பை கண்காணித்த மருத்துவர்கள் இளையராஜாவுக்கு லேசான மாராடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவருக்கு "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துவந்த இளையராஜா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இளையராஜா தற்பொழுது பூரண குணமாகியுள்ளதால் இன்று வீட்டிற்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜாவிற்கு ஏற்பட்ட இந்த நெஞ்சுவலியால் அவரது ரசிகர்கள் மாபெரும் துயரத்திற்கு உள்ளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment