27.12.13

2013ல் அதிக பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்


2013ல் அதிக படங்களில், அதிக பாடல்கள் எழுதியவர் என்கிற பெருமையை தட்டிச்செல்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

அதிலும் 34 படங்களில் 106 பாடல்கள் என்பது மிகப்பெரிய சாதனைதான். இதில் 10 படங்களில் அனைத்துப்பாடல்களையும் எழுதியிருப்பது இன்னொரு சாதனை. ‘தங்கமீன்கள்’ படத்தில் “ஆனந்தயாழை மீட்டுகிறாய்”, ‘தலைவா’வில் “வாங்கன்ன வணக்கங்கன்ன” “யார் இந்த சாலையோரம்”, ‘ராஜாராணி’யில் “சில்லென ஒரு மழைத்துளி”, ‘உதயம் என்.ஹெச்-4’ல் “யாரோ இவன்”, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் “ஒன்னப்பாத்த நேரம்” என இந்த வருடத்திய சூப்பர்ஹிட்டுகள் எல்லாமே நா.முத்துக்குமாரின் கைவண்ணம்தான்.
இவைதவிர, தற்போது 97 படங்களுக்கு இவர் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார். அதில் 31 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் இவர்தான் எழுதுகிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடரும் இவரது இசையுலகப்பயணம் பத்தாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment