27.12.13

‘நான் ஈ’ சுதீப்பை இயக்கும் பேரரசு?



நான் ஈ’ சுதீப்பை வைத்து பேரரசு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

சமீபகாலமாக பேரரசு இயக்கிய படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதனால் எப்படியாவது ஒரு சூப்பர்ஹிட் படம் கொடுத்தே தீருவேன் என்ற வைரக்கியத்துடன் தற்போது ‘திகார்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் பேரரசு.
இந்தப் படத்தில் மிகப்பெரிய டானாக அலெக்ஸ்சாண்டர் என்ற வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இது மலையாளத்தில் மம்முட்டி நடித்து 22 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சாம்ராஜ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து பேரரசு, நான் ஈ’ சுதீப்பை வைத்து தமிழ் மற்றும் கன்னடத்தில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதுபற்றி சுதீப் சொல்லும்போது “பேரரசும் நானும் இதுபற்றி பேசியுள்ளோம். ஆனால் எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்கிறார்.
ஆனால் பேரரசுவோ “இருமொழிகளில் சுதீப்பை வைத்து படம் இயக்குவது கிட்டத்தட்ட உறுதிதான். இந்தப்படம் வழக்கமான என் பாணியிலான கமர்ஷியல் படமாக இருக்கும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார். திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தனி போன்ற படங்களை இயக்கியிருப்பவர்தான் இந்த பேரரசு.

No comments:

Post a Comment