27.12.13

மேற்கு வங்கம்: குண்டு வெடிப்பில் 5 பேர் பலி

மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியை அடுத்த செயின்ட் பால் பள்ளி அருகே வியாழக்கிழமை மாலை சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த 5 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்ததாக காவல்துறை ஐஜி சசிகாந்த் பூஜாரி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ""நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகுதான் இது பயங்கரவாதிகளின் தாக்குதலா? அல்லது சைக்கிளில் வெடிகுண்டை ஏற்றிச் சென்றபோது அது தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததா? என்பது பற்றி தெரியவரும்'' என்றார்.

No comments:

Post a Comment