22.12.13

மும்பையில் பாஜக பேரணி: மோடிக்கு 7 அடுக்கு பாதுகாப்பு

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாஜக பேரணியில் பங்கேற்கும் அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு 7 அடுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகரான பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாஜக பேரணியில் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறார். இதில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மும்பை காவல்துறை ஆணையர் சத்யபால் சிங் கூறுகையில், ""மோடிக்கு பயங்கரவாதிகளின் மிரட்டல் இருப்பதால் பேரணி நடைபெறும் பகுதியில் 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு படைப் போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் தீவிர வாகன சோதனையும் நடத்தப்படுகிறது '' என்றார்.

No comments:

Post a Comment