22.12.13

மேற்குவங்கத்தில் விஷவாயுக் கசிவு: நீதிபதி உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி


மேற்குவங்கத்தில் சனிக்கிழமை விஷவாயு பரவியதில், நீதிபதி உள்பட 3 பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் மேலும் கூறியது: கொல்கத்தாவின் சியால்டா பகுதியில், குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்தின் 3ஆவது தளத்திலிருந்து, திடீரென நெடியுடன் கூடிய வாயு காற்றில் கலந்து நீதிமன்ற வளாகம் முழுவதும் பரவியது. இதனால் அங்கிருந்த அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. விஷவாயு பரவியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment