22.12.13

தந்தை வீட்டிற்கு வந்திருந்த திருமணமான பெண் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தந்தை வீட்டிற்கு வந்திருந்த திருமணமான பெண்ணை காணோம் என்ற புகாரில், போலீஸார்  வழக் குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். 
அபிராமம் காவல் நிலைய சரகம் உடையநாதபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பிக்கண்(60). இவரது மகள் மகேஸ்வரி(25) என்பவரை, முதுகுளத்தூர் அருகே எஸ்.குளத்தைச் சேர்ந்த முத்து குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருந் தார். இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. முத்து குமாரும், மகேஸ்வரியும் பழனியை அடுத்து உடும லைபேட்டை பகுதியி்ல தங்கி ஆடுகள் மேய்த்து வந்தார்களாம். இதற்கிடையி்ல் டிச.5-ல், தந்தை வீட்டிற்கு, குழந்தையுடன் மகேஸ்வரி வந்திருந்தாராம்.
அப்போது முதுகுளத்தூருக்கு சென்று மருந்து வாங்கி வருவதாகச் சொல்லி விட்டு, தந் தை வீட்டில் குழந்தையை விட்டுச்சென்ற மகேஸ்வரி திரும்பவும் வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.  மகே ஸ்வரியை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியாமற்போனதால், அபிராமம் காவல் நிலையத்தில் தந்தை கருப்பிக்கண் புகார் செய்தார். மகேஸ்வரி எங்கே, ஏன் சென்றார்? என்பதும், யாரும் கடத்தி்ச சென்றார்களா? என்பதும் தெரியவில்லை. காவல் ஆய்வாளர் கணபதி, சார்பு ஆய்வாளர் லட்சுமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, காணா மற்போன மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment