22.12.13

அம்மா' திட்ட முகாமில் 269 மனுக்கள் மீது தீர்வு

தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாம்களில் 269 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
பாலக்கோடு வட்டத்தில் புலிக்கரையில் வருவாய்க் கோட்டாட்சியர் பி.மேனகா தலைமையிலும், தருமபுரி வட்டத்துக்கு உள்பட்ட ஆண்டிஅள்ளியில் வட்டாட்சியர் ஏ.ஜெ.செந்தில் அரசன் தலைமையிலும், பென்னாகரத்துக்கு உள்பட்ட அஞ்சேஅள்ளியில் வட்டாட்சியர் கே.தேவிகா தலைமையிலும் "அம்மா' திட்ட முகாம் நடைபெற்றது.
அதேபோல, அரூர் வடுகப்பட்டியில் வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.சந்திரசேகரன் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டிக்கு உள்பட்ட போசிநாயக்கனஅள்ளியில் வட்டாட்சியர் கே.தாண்டவன் தலைமையிலும் முகாம் நடைபெற்றது.
ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 449 மனுக்கள் பெறப்பட்டதில், 269 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன.

No comments:

Post a Comment