22.12.13

நல்ல நேரம் வந்தது... புதுப்பட வேலையில் மும்முரம் காட்டும் சூப்பர் ஸ்டார்!

நேரம், காலம், ஜாதகத்தில் நம்பிக்கை கொண்ட ரஜினி, தனக்கான நல்ல நேரம் வரும் வரை காத்திருந்து, இப்போது பட வேலைகளில் மும்முரமாகியுள்ளார்.
பாபா படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்தார் ரஜினி. காரணம் கேட்டபோது, நேரம் சரியாக இல்லேன்னா என்ன பண்ணாலும் ஒன்றும் நடக்காது என்று அவர் கூறியது நினைவிருக்கலாம்.
நல்ல நேரம் வந்தது... புதுப்பட வேலையில் மும்முரம் காட்டும் சூப்பர் ஸ்டார்!

இந்த முறை ராணா படத் தொடக்கவிழாவன்றே உடல் நலம் குன்றிய ரஜினி, பின்னர் உடல்நிலை சரியாகி வந்து கோச்சடையானில் நடித்தார். ஆனால் அந்தப் படம் வெளியாவது குறித்து இன்னும் உறுதியாக எதுவும் தெரியவில்லை.
இப்போது ஜாதகப்படி ரஜினிக்கு சாதகமாக உள்ளதாம் நேரம். எனவே புதிய படத்துக்கான வேலைகளை சத்தமின்றி ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார்கள்.
இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் என்று கேவி ஆனந்த், கேஎஸ் ரவிக்குமார், ஷங்கர் என பல யூகங்கள். கடையில் வென்றவர், லிஸ்டில் கடைசியாக இருந்த ஷங்கர்தானாம்!

No comments:

Post a Comment