22.12.13

ஏற்காட்டில், இரண்டாம் பருவ மலர் கண்காட்சி, வரும், 28ம் தேதி துவங்கும்: சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர்  கண்காட்சி வரும் 28ம் தேதி துவங்கும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது
ஏற்காட்டில், 28ம் தேதி கலைபண்பாட்டு துறை சார்பில்,  துவங்கும் மலர் கண்காட்சி மற்றும் கலை விழாவில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, குதிரைகள் அணிவகுப்பு, சேலம் கலைமுதுமணி அங்கம்மாள் குழுவினரின் நையான்டி மேளம், கரகாட்ட நிகழ்ச்சி மற்றும் வாண வேடிக்கையுடன், நடைபெறும். இதில் அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment