22.12.13

வேலூர் சர்க்கரை ஆலை அரவை இயந்திரம் மீண்டும் பழுது

வேலூரை அடுத்த திருவலம் அன்பூண்டியில் உள்ள வேலூர் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள கரும்பு அரவை இயந்திரம் மீண்டும் பழுதடைந்தது. அதை சீர்செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
இதனால் வெள்ளிக்கிழமை மாலை முதல் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றி வரப்பட்ட கரும்புகள் ஆலை வளாகம் மற்றும் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரவை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. அன்றை மாலை திடீரென அரவை இயந்திரம் பழுதடைந்தது. 2 தினங்கள் போராடி மீண்டும் இயந்திரத்தை இயக்கத் செய்தனர். இந்நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை மாலை இயந்திரம் பழுதடைந்ததை அடுத்து கரும்பு அரவை பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment