22.12.13

தில்லியில் தாக்குதல் நடத்த சதி: 2 தீவிரவாதிகளின் காவல் நீட்டிப்பு

தில்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 தீவிரவாதிகளின் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரஷீத், ஷாஹித் ஆகியோர் தில்லியில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களது காவல் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் ஜாவெத் பலூச்சியுடன் அவர்கள் தொடர்பு வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். எனவே "இந்த சதித் திட்டத்தில் தொடர்புடைய மேலும் பலர் குறித்து விசாரிக்க வேண்டும். அதற்காக அவர்களது காவலை 13 நாள்கள் நீட்டிக்க வேண்டும்' என்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்ட இருவரின் காவலை ஜனவரி 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment