6.12.13

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் பிகினி படத்திற்கு 4000 பவுண்ட் கொடுத்த ரெபக்கா ப்ரூக்ஸ்



லண்டன்,
பிரிட்டனில் இருந்து வெளிவந்த 168 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை நிறுவனம் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கியது. இதையடுத்து பத்திரிகையை நிறுத்தி விடுவதாக அதன் அதிபர் ரூபர்ட் முர்டோக் அறிவித்தார். அதன்படி பத்திரிகை நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முர்டோக்கின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான ரெபக்கா ப்ரூக்ஸ் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து விசாரணை நடந்தது. ஒட்டு கேட்பு குற்றச்சாட்டை ரெபக்கா ப்ரூக்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸின் பிகினி படத்திற்கு அவர் சட்ட விரோதமாக 4000 பவுண்ட் கொடுத்ததுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கறிஞர் ரெபேக்கா சால்க்லே,  கடந்த 2006ம் ஆண்டு  பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸின் பிகினி படத்திற்கு 4000 பவுண்ட் தொகையை ராணுவ அகடாமியில் உள்ள ராணுவ வீரர் ஒருவருக்கு கொடுக்க ரெபக்கா ப்ரூக்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.  இளவரசர் வில்லியம்ஸ் கடந்த 2005ம் ஆண்டு சாண்ட்ஹர்ஸ்ட் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment