6.12.13

‘என்னை செல்போனில் மர்மநபர்கள் மிரட்டுகிறார்கள்’ கன்னட நடிகை சஞ்சனா பரபரப்பு பேட்டி

பெங்களூர்,
கன்னட திரையுலகில் கதாநாயகியாக நடித்து வருபவர் சஞ்சனா. இந்த நிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்று நடிகை சஞ்சனா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
என்னுடைய செல்போன் எண்ணுக்கு இரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். நான் எடுத்து பேசும் போது, நீங்கள் யார்? எங்கே இருக்கிறீர்கள்? என்று பல கேள்விகளை கேட்கிறார்கள். சில நேரத்தில் தவறான வார்த்தைகளை கூட பயன்படுத்தி பேசுகின்றனர். பின்னர் அடுத்த சில நிமிடத்தில் இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். அந்த மர்மநபர்கள் யார்? என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தினமும் இரவு நேரத்தில் இதுபோன்று என்னுடைய செல்போனுக்கு தொடர்பு பேசி மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
மர்மநபர்கள் பேசும் நம்பருக்கு நான் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு சினிமா துறையில் நல்ல பெயர் இருக்கிறது. இதுபோன்று மிரட்டல்களை நான் விரும்பவில்லை.
இவ்வாறு நடிகை சஞ்சனா கூறினார்.
இந்த சம்பவம் கன்னட நடிகர், நடிகைகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A

No comments:

Post a Comment