6.12.13

ஆக்ராவில் ஆந்திரபிரதேஷ் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது துப்பாக்கி சூடு; 5 போலீசார் காயம்



ஆக்ரா,
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கொலை குற்றத்தில் தொடர்புடையை இரண்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் விசாரணைக்காக ஆக்ரா சிறையில் இருந்து காஷியாபாத் கோர்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணையை அடுத்து அந்த கைதிகள் மீண்டும் சிறைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்கள் ஆந்திர பிரதேஷ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்துள்ளனர். ரெயில் பிராக் ரெயில் நிலையத்திற்கு வந்ததும், அங்கு இருந்த 15 பேர் கொண்ட கும்பல் ரெயில் பெட்டியின் மீது கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி ஒரு கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில் 5 போலீசார்கள் காயம் அடைந்தனர்.
கொலை குற்றவாளிகள் இரண்டு பேரும் தப்பித்து ஓடிவிட்டனர். கொலை குற்றவாளிகள் வந்த பெட்டியில் குற்றவாளிகள் மற்றும் 6 போலீசார் மட்டுமே இருந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தப்பி ஓடியவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய கும்பலை தேடி வருகிறது.

No comments:

Post a Comment