6.12.13

‘தெகல்கா’ ஆசிரியர் தருண் தேஜ்பாலின் மகளிடம் விசாரணை



பனாஜி,
தெகல்கா வார இதழ் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் தனது பத்திரிகையில் பணியாற்றும் ஒரு பெண் பத்திரிகையாளரை மானபங்கப்படுத்தியதாக கடந்த சனிக்கிழமை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார் .அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தார். இவ்விவகாரம் தொடர்பாக தேஜ்பாலின் மகளிடம் கோவா கிரிமினல் பெஞ்ச் விசாரணை நடத்தியுள்ளது.
கிரிமினல் பெஞ்ச் அதிகாரி, தேஜ்பாலின் மகள் தியாவிடம் டோனா பவ்லா அருகே 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பால் குறித்து அவரது மகளுக்கு தகவல்கள் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதி படுத்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment