6.12.13

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு காணமுடியும்: பாகிஸ்தான்



இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய அந்நாடு பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்சினை காரணமாக, இந்தியாவுடன் எந்த நேரத்திலும் போர் மூளும் என்று அவர் கூறினார்.மேலும், தனது வாழ்நாளில் காஷ்மீர் விடுதலை ஆவதை காண ஆவலாக இருப்பதாகவும் அவர் கூறினார். பின்னர் நவாஸ் ஷெரீப்பின் கருத்து’ என்று நவாஸ் ஷெரீப் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது.
இருப்பினும், நவாஸ் ஷெரீப்பின் அச்சுறுத்தலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தக்க பதிலடி கொடுத்தார். நவாஸ் ஷெரீப் பேச்சு குறித்து நிருபர்கள் கருத்து கேட்டபோது, பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது:–என் வாழ்நாளில், இந்தியாவுடனான எந்த போரிலும் பாகிஸ்தான் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று அவர் கூறினார்.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று கூற்யுள்ளது.
மன்மோகன் சிங்கின் பேச்சுக்குகு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அகமத் சவுதாரி, இரு நாடுகளும் அவநம்பிக்கையை தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாகவும், அதனாலே இரு நாடுகளுக்கு இடையே உள்ள தவறான எண்ணங்களை தீர்க்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும், பேச்சுவார்த்தையாலே இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு வலுவடையும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment