6.12.13

சியாச்சினில் ராணுவத்தை திரும்பபெற வேண்டும் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ராணுவம்

இஸ்லாமாபாத்,
சியாச்சின் மலைப்பகுதியில் தங்கியுள்ள இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் பொருட்களை வீசி எறிவதால் அங்கு மாசு ஏற்படுகிறது. அங்கிருந்து வரும் நீரே பாகிஸ்தானில் உள்ள மக்களின் குடிநீராக உள்ளது. இதனால் தீவிரமான சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று பாகிஸ்தான் கூறியது. இந்த பிரச்சனையை தீர்க்க இந்தியா உடனடியாக ராணுவத்தை அங்கிருந்து திரும்பபெற வேண்டும் என்று கூறியது. பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை இந்திய ராணுவம் நிராகரித்துள்ளது.
இது மிகவும் முக்கியமானது. நாங்கள் அங்கு சுற்றுச்சூழல் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment