6.12.13

சுங்கத்துறை அதிகாரியை தாக்கியதாக வக்கீல் கைது

சென்னை,
சென்னை பாரிமுனை அருகேயுள்ள ராஜாஜி சாலையில் சுங்கத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவர் சீனிவாசன். இவர், வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், வக்கீல் ஜாகீர்உசேன் என்பவர் தன் அலுவலக அறைக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தன்னை தாக்கியதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர்உசேனை கைது செய்து, விசாரணை நடத்தினர்.
பின்னர், சைதாப்பேட்டையில் உள்ள 7–வது குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ஜெய்ஸ்ரீயின் வீட்டிற்கு வக்கீல் ஜாகீர்உசேனை போலீசார் அழைத்து சென்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது, ஜாகீர் உசேன் சார்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜெய்ஸ்ரீ, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment