14.12.13

ஒன்றரைக் கோடி பணம் தரணும்- வெங்கட் பிரபு மீது சோனா புகார்

ஒன்றரைக் கோடி பணம் தரணும்- வெங்கட் பிரபு மீது சோனா புகார்



படம் இயக்க தான் கொடுத்த ரூ 1.5 கோடி பணத்தை வெங்கட் பிரபு தராமல் இழுத்தடிக்கிறார். எனவே அவரிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றுத் தருமாறு இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை சோனா.
சோனாவும் வெங்கட் பிரபுவும் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். ஆனால் எஸ்பிபி சரண் விவகாரத்தில் மோதிக் கொண்டனர்.
ஆனால் பின்னர் சமரசமாகிவிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இயக்குநர்கள் சங்கத்தில் நடிகை சோனா புகார் ஒன்றைக் கூறியுள்ளார். அதில், "வெங்கட்பிரபு ‘கோவா' படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அவரை அணுகி எனக்கொரு படம் இயக்கித் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்தார்.
‘கோவா' படம் ரிலீசானதும் நான் தயாரிக்கும் படத்தை டைரக்டு செய்ய முடிவானது. இதற்காக அவருக்கு ரூ. 1.5 கோடி பணம் கொடுத்தேன். ஆனால் உறுதி அளித்தபடி என் படத்தை அவர் இயக்கவில்லை.
வேறு படம் எடுக்க போய் விட்டார். அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட போது தரவில்லை. பல ஆண்டுகளாக பணத்தைக் கேட்டு வருகிறேன். இதுவரையிலும் அவர் தரவில்லை. வெங்கட் பிரபு தற்போது ‘பிரியாணி' படத்தை இயக்கி உள்ளார். அந்த படம் ரிலீசுக்கு முன் எனக்கு தர வேண்டிய பணத்தை வாங்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

No comments:

Post a Comment