14.12.13

சச்சினுக்கு மாநிலங்களவை பாராட்டு




முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெற தகுதி பெற்றதற்காக மாநிலங்களவை அவருக்கு பாராட்டு தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை வழக்கமான அலுவல் தொடங்கும் முன்பாக சச்சின் குறித்து மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி பேசினார். அப்போது அவர் "நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய "பாரத ரத்னா' விருது பெற சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது நமக்கெல்லாம் மிகவும் பெருமை தரக்கூடிய விஷயம். அவரை இந்த அவையே சேர்ந்து பாராட்டுகிறது' என்றார்.
நியமன உறுப்பினரான சச்சின், வெள்ளிக்கிழமை மாநிலங்களவைக்கு வந்திருந்தார். பல்வேறு பிரச்னைகளால் மாநிலங்களவை அலுவல் காலை 11.05 மணி முதல் நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது சச்சின் டெண்டுல்கரை பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் சூழ்ந்து கொண்டு ரசிகர்களைப் போல அவரிடம் "ஆட்டோகிராஃப்' கேட்டுப் பெற்றனர்.

No comments:

Post a Comment