11.12.13

தெலங்கானா பிரச்னை: திக்விஜய் சிங் 12-இல் ஹைதராபாத் பயணம்?

தனித் தெலங்கானா பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்த, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் வரும் 12ஆம் தேதி ஹைதராபாதுக்கு செல்லலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின்போது, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களை திக்விஜய் சிங் சந்திப்பதுடன், அந்த மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனித் தெலங்கானா மாநிலம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழு தயாரித்த வரைவு மசோதாவுக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவரிடம் அனுப்பியுள்ளது. அந்த வரைவு மசோதாவை குடியரசுத் தலைவர் ஆந்திர சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்தால், வரும் 12ஆம் தேதி கூடும் அந்த மாநில சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரில் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடும் எனத் தெரிகிறது.
அதேசமயம், ஆந்திர சட்டப்பேரவைக்கு அந்த வரைவு மசோதா அனுப்பி வைக்கப்பட்டால் அதை தோற்கடிப்போம் என்று அந்த மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment