11.12.13

நடிகர் மயில்சாமியை மிரட்டியவர் அடையாளம் தெரிந்தது



தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமியை மிரட்டியவரை போலீஸôர் கண்டறிந்தனர்.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி, ஞாயிற்றுக்கிழமை மாலை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தாராம். அப்போது அவர் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாம்.அதில் பேசிய நபர், தான் போலீஸ் என்றும், அண்மையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை பிடித்தபோது, அந்த கும்பலைச் சேர்ந்த சில பெண்கள் மயில்சாமி பெயரை கூறியதாகவும், மேலும் அவர்களிடம் மயில்சாமியின் செல்போன் எண் இருந்ததாகவும் அந்த நபர் தெரிவித்தனராம்.
மேலும் அந்த நபர், பாலியல் தொழில் உள்ளவர்களிடம் மயில்சாமிக்கு இருக்கும் தொடர்பை வெளியே சொல்லாமல் இருப்பதற்கு ரூ. 50 ஆயிரம் வேண்டும் என கேட்டு மிரட்டினாராம்.
இதைக் கேட்டு அதிர்ச்சியைடந்த மயில்சாமி, அந்த நபரிடம் மறுத்து பேசியதாக தெரிகிறது. அப்போது அந்த நபரிடமிருந்து அருகே இருந்த ஒரு பெண்ணும், மயில்சாமியை மிரட்டும் வகையில் செல்போனில் பேசினாராம். பின்னர் இருவரும் செல்போன் இணைப்பை தூண்டித்துவிட்டனராம்.இதனால் அதிர்ச்சியடைந்த மயில்சாமி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விருகம்பாக்கம் எழில்நகரைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணின் செல்போனில் இருந்தே மயில்சாமிக்கு மிரட்டல் வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவர் வீட்டுக்கு விசாரணை செய்ய சென்றனர். ஆனால் அந்த பெண் அங்கிருந்து 2 நாள் முன்பே, வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் போலீஸார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.அதேநேரத்தில் கடந்த 10 நாள்களாக மயில்சாமி செல்போனுக்கு யாரெல்லாம் தொடர்பு கொண்டு பேசினர் என்ற தகவலை பெற்றனராம். இதில் மயில்சாமியும் அந்த பெண்ணிடம் 50 முறைக்கு மேல் தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்துள்ளதாம்.
இதனால் போலீஸார் மயில்சாமியிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment