11.12.13

சுப்ரபாத சேவை ரத்து

திருமலையில் சுப்ரபாத சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு தினமும் அதிகாலை சுப்ரபாத சேவையை நடத்துவது வழக்கம். ஆனால் டிசம்பர் 16-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மார்கழி மாத கடிகை தொடங்க உள்ளது. டிசம்பர் 17-ஆம் தேதி அதிகாலை முதல் மார்கழி மாதம் முழுவதும் ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவையை ரத்து செய்து திருப்பாவை சேவையை நடத்த உள்ளது.
மேலும் மார்கழி மாத 30 நாட்களும் ஆண்டாள் நாச்சியாரின் பாசுரங்கள் பாடப்படும். மேலும் இரவு ஏழுமலையான் சன்னதியில் உள்ள போகசீனிவாசமூர்த்திக்கு நடத்தப்படும் ஏகாந்த சேவையை இனி ஸ்ரீகிருஷ்ண சுவாமிக்கு நடத்த உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment