11.12.13

காவல்துறை வாகனம் மீது தாக்குதல்: இந்து முன்னணியினர் கைது

சென்னை அயனாவரத்தில் காவல்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தி, கண்ணாடியை உடைத்ததாக இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கோரி இந்து முன்னணி அமைப்பின் சார்பில்  அயனாவரம் சந்திப்பில் கடந்த 6-ம் தேதி காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடைபெற்றதால் போராட்டத்தில் பங்கேற்றோரை போலீஸார் கைது செய்ய முயன்றனர்.அப்போது போலீஸôருக்கும், அந்த அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அந்த அமைப்பினரை போலீஸார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட அந்த அமைப்பினர்,  வேனின் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.
இது குறித்து அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் ஓட்டேரியைச் சேர்ந்த ஆபேல்ராஜ் (29), அதேப் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் (20) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.  கைது செய்யப்பட்ட கங்காதரன் அண்ணாநகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

No comments:

Post a Comment