11.12.13

இப்படி நானே எனக்கு ஆப்பு வச்சுகுவேனா: புலம்பும் நடிகர்

சென்னை: பவர் நடிகர் தனது வாயால் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டுள்ளார்.
பில்டப்புக்கு பெயர் போன பவர் நடிகருக்கு சினிமாவில் பெயர் வாங்கிக் கொடுத்தது என்னவோ சந்தன நடிகரின் லட்டு படம் தான். இதையடுத்து மளமளவென பல படங்களில் ஒப்பந்தமான பவர் மோசடி வழக்குகளில் சிக்கி சிறை சென்றார்.
இந்நிலையில் எந்த படத்தை எடுத்தாலும் பிரமாண்டமாக எடுத்து வெற்றி கொடுக்கும் 4 எழுத்து இயக்குனரின் படத்தில் பவர் ஒப்பந்தமானார். அந்த பிரமாண்ட இயக்குனர் தனது படம் ரிலீஸாகும் வரை அது குறித்த தகவல்களை கசியக்கூட விட மாட்டார். அதனால் பவரிடம் உங்களின் கதாபாத்திரம் பற்றி எதுவும் வெளியே சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் பவரால் வாயைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்தையும் உளறித் தள்ளிவிட்டார். சிறைக்கு சென்ற தனக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறி வந்தார். தான் இவ்வளவு கூறியும் உளறியதால் ஆத்திரமடைந்த இயக்குனர் பவர் வரும் காட்சிகளை கத்தரித்துவிட்டாராம்.
இப்படி என் வாயால் எனக்கு நானே ஆப்பு வைப்பேனா என்று பவர் நடிகர் தற்போது புலம்புகிறாராம்.

No comments:

Post a Comment