11.12.13

குஜராத்தில் லோக் ஆயுக்த நீதிபதி இன்று பதவி ஏற்பு


குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்த (மக்கள் நீதிமன்றம்) நீதிபதியாக, குஜராத் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.பி.புச் புதன்கிழமை காலை பதவி ஏற்கிறார்.
ஆமதாபாத் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குஜராத் ஆளுநர் கமலா பெனிவால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு நீதிபதி நியமிக்கப்படாததால் கடந்த 10 ஆண்டுகளாக லோக் ஆயுக்த செயல்படவில்லை.
இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு குஜராத் லோக் ஆயுக்த நீதிபதியாக ஆர்.எம்.சோனி பதவி வகித்தார்.

No comments:

Post a Comment