11.12.13

பணியாளர்களை கண்காணிக்க புதிய நடைமுறை


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணி புரியும் அதிகாரிகளையும், ஊழியர்களையும் கண்காணிக்க புதிய நடைமுறையை தேவஸ்தானம் கொண்டு வர உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள அனைத்துத் துறைகளையும் இனி ஆன் லைன் மூலம் தேவஸ்தானம் கண்காணிக்க உள்ளது.
மேலும் திருப்பதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனி வருகை பதிவேட்டை குறிக்க அக்ஸஸ் கார்ட் வழங்க உள்ளது.
இதன் மூலம் ஊழியர்கள் காலம் தவறாமல் பணிக்கு வரவும், கையொப்பம் இட்டு தங்கள் வேறு பணிகளை கவனிக்க செல்வதை தடுக்க முடியும்.
மேலும் ஆன் லைன் மூலம் கண்காணிப்பதால் அனைத்துத் துறையின் செயல்பாடுகளும் உயரதிகாரிகளுக்கு சரிவர தெரியவரும். இதை முதலில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் அமல்படுத்த திட்டமிடபட்டுள்ளது. அதற்கு பின் திருப்பதியில் உள்ள மற்ற கோயில்களுக்கும், மற்ற மாநிலங்களில் உள்ள விசாரணை மையங்களுக்கும் இந்த புதிய நடைமுறை செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment