11.12.13

மாநிலங்களவை பாஜக கொறடாவாக ஜாவடேகர் நியமனம்



மாநிலங்களவை பாஜக தலைமைக் கொறடாவாக அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற பாஜக குழுத் தலைவர் எல்.கே. அத்வானி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில் நடைபெற்றது. அக் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற இக் கூட்டத்தின்போது, பிரகாஷ் ஜாவடேகரை தலைமைக் கொறடாவாக நியமிக்கும் முடிவை எல்.கே. அத்வானி அறிவித்தார்.
மாநிலங்களவை பாஜக தலைமைக் கொறடாவாக இருந்த மாயா சிங், மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் குவாலியர் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து, அப் பதவிக்கு பிரகாஷ் ஜாவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment