24.12.13

பொன்னமராவதி அருகே மண்ணில் புதைந்து கிடந்த 15 சாமி சிலைகள் கண்டெடுப்பு

பொன்னமராவதி அருகே மண்ணில் புதைந்து கிடந்த 15 சாமி சிலைகள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி வட்டம் ரெட்டியாபட்டி கிராமத்தை சார்ந்தவர் வெள்ளக்காளை.விவசாயியான இவர் திங்கள்கிழமை அன்று ஆடு மேய்க்கும்போது ஊரின் மேற்குப்பகுதியில் வரத்து வாரியில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த 15 சாமி சிலைகளை கண்டெடுத்துத்துள்ளார்.இத்தகவலை இவர் மூலங்குடி வட்டத்தை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஐ.செய்யதலி பாத்திமாவிடம் கூறியதை அடுத்து அவரும் உதவியாளர்களும் ரெட்டியபட்டி சென்று வெள்ளக்காளை வீட்டில் இருந்த விநாயகர் சிலைகள் 3,பரமசிவன் சிலை 1,பெருமாள் சிலை 5,கருடாழ்வார் சிலை 1,அம்மன் சிலை 1,மீனாட்சி சிலை 1,அகல்விளக்கு பெண்சிலை 2,வராக மூர்த்தி 1 என 9.250 கிலோ எடை கொண்ட சிலைகளை கைபற்றி பொன்னமராவதி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment