24.12.13

திமுகவில்தான் உள்ளேன்: மு.க.அழகிரி




திமுகவில் இருந்து விலகவில்லை. தொடர்ந்து கட்சி பணி ஆற்றுவேன் என்று அக் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கூறினார்.
திமுகவின் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மு.க.அழகிரி பங்கேற்காததுடன், அவரின் மதுரை ஆதரவாளர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மு.க.அழகிரி திங்கள்கிழமை அளித்த பேட்டி:
கேள்வி: பொதுக்குழுவில் நீங்கள் பங்கேற்கவில்லையே?
பதில்: பொதுக்குழுவில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமலிருப்பதும் என் விருப்பம்.
கே: காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுகவின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதே?
ப: பொதுக்குழுவின் முடிவு தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை. அதேசமயம் பொதுக்குழுவின் முடிவை ஏற்கிறேன்.
கே: பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்ட அறிவிப்பில் உங்கள் பெயர் இடம்பெறவில்லையே?
ப: என் பெயர் பேச்சாளர்கள் பட்டியலில் இல்லை. அதனால் என் பெயர் அறிவிக்கப்படவில்லை. இது ஒன்
றும் பெரிய செய்தி இல்லை. வழக்கமான ஒன்றுதான்.
கே: திமுகவில்தான் உள்ளீர்களா?
ப: திமுகவில்தான் உள்ளேன். தொடர்ந்து கட்சி பணியாற்றுவேன் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment