24.12.13

நலமாக உள்ளார் இளையராஜா!


நலமாக உள்ளார் இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இதயம் சீரான இயக்கத்துக்கு திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வெடுத்து வருகிறார்.
இசைஞானி இளையராஜா இன்று பிரசாத் ஸ்டுடியோவில் ரிகார்டிங் பணிகளில் இருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, சுவாசம் சீராக்கப்பட்டது. பின்னர் அவரது ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்றவைகள் சோதிக்கப்பட்டன.
இதயக் குழாயில் இருந்த அடைப்பு காரணமாக அவருக்கு நெஞ்சடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது.
இப்போது அவரது இதயம் சீராக இயங்குவதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வெடுப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரு தினங்களில் வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார் இளையராஜா என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment