24.12.13

சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகாம் இன்று தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் இன்று(டிச.24-ஆம்) தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வங்கிகள் சார்பில் மகளிர் மற்றும் மாற்றுத்தினாளிகள் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், வருகிற 24-ஆம் தேதி அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளது. அதே போல, டிசம்பர் 26-இல் பாப்பிரெட்டிப்பட்டி, 27-இல் மொரப்பூர், 28-இல் பென்னாகரம், 30-இல் பாலக்கோடு மற்றும் 31-ஆம் தேதி நல்லம்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இந்த கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, இந்த முகாம்களில் தகுதிவாய்ந்த சுய உதவிக்குழுக்கள் தங்களின் வங்கி சேமிப்பு புத்தகம், தீர்மானம் மற்றும் ரொக்கப்புத்தகம், பொதுப்பேரேடு, தணிக்கை அறிக்கை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment