24.12.13

நடிகைகள் அனுஷ்கா, ப்ரணிதாவை நெருக்கியடித்த ரசிகர்கள்- தடியைச் சுழற்றிய போலீஸ்!

ஜவுளிக் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைகள் அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை ரசிகர்கள் நெருக்கியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
நடிகைகள் இப்போதெல்லாம் ஷூட்டிங்கை விட அதிகம் காணப்படுவது ஜவுளிக்கடை, நகைக்கடை, கார் ஷோரூம் திறப்பு விழாக்களில்தான்.

நடிகைகள் அனுஷ்கா, ப்ரணிதாவை நெருக்கியடித்த ரசிகர்கள்- தடியைச் சுழற்றிய போலீஸ்!

இதற்காக கணிசமான சம்பளம் மற்றும் பரிசுகளைப் பெறுகிறார்கள்.
ஆந்திராவில் ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடாவில் புதிய ஜவுளிக் கடைகளை திறக்க அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை அழைத்திருந்தனர். இருவரையும் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி நின்றார்கள்.

அனுஷ்கா, ப்ரணிதா காரில் வந்து இறங்கியதும் அவர்களை காண கூட்டத்தினர் முண்டியடித்தனர். தடுப்பு வளைவை தாண்டி இரு நடிகைகளையும் தொட்டுப் பார்க்க முனைந்தனர்.
விழா அமைப்பாளர்கள் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அனுஷ்கா, ப்ரணிதாவை ரசிகர்கள் நெருக்கியடித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினார்கள்.

இதில் சில ரசிகர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

No comments:

Post a Comment