24.12.13

அழுக்கான நோட்டுக்களை மாற்றிக்கொள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிறப்பு ஏற்பாடு

ரூ. 10 முதல் 50 வரையிலான மிகவும் அழுக்கான ரூபாய் நோட்டுக்களை ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மிகவும் அழுக்கான ரூ. 10, 20 மற்றும் ரூ.50 ஆகிய நோட்டுக்களை செüகார்பேட்டை, எசுபிளனேடு, நுங்கம்பாக்கம், கதீட்ரல், தேனாம்பேட்டை, மகாலிங்கபுரம், சாந்தோம், மயிலாப்பூர், சி மற்றும் ஐ மயிலாப்பூர், ரங்கராஜபுரம், ஆதம்பாக்கம், தியாகராய நகர், தலைமைச் செயலகம், வில்லிவாக்கம், மீனம்பாக்கம், பெரம்பூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, விருகம்பாக்கம், பெசன்ட்நகர், அடையாறு, மேற்கு மாம்பலம், சாலிகிராமம் மற்றும் கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment