24.12.13

லடாக்கில் இருந்து வெளியேறினர் சீனப் படையினர்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

லடாக் பகுதிக்குள் ஊடுருவி முகாமிட்டிருந்த சீனப் படையினர், இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு அங்கிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பகுதியான லடாக்கில் உள்ள சேப்ஜி என்னுமிடத்தில் கடந்த வாரம் சீனப் படையினர் 20 முதல் 22 பேர் வரை ஊடுருவி, கூடாரங்களை அமைத்து தங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சீனப் படையினரின் அத்துமீறலை தொடர்ந்து சனிக்கிழமை இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் கொடி அணிவகுப்புக் கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, லடாக்கில் முகாம்களை அமைத்து தங்கியிருந்த சீனப் படையினர், அங்கிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment