24.12.13

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:தேவாலயங்களில் பாதுகாப்பு

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள 48 தேவாலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  
டிசம்பர் 25-ம் தேதி (புதன்கிழமை) கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மதுரையில் புதன் நள்ளிரவிலும், வியாழன் அதிகாலையிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
கீழவெளிவீதியில் உள்ள தூயமரியன்னை தேவாலயம் உள்ளிட்டவற்றில் புதன் நள்ளிரவிலும், நரிமேடு சி.எஸ்.ஐ.தேவாலயம் உள்ளிட்டவற்றில் வியாழன் அதிகாலையிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து புதன்கிழமை முதலே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment