26.12.13

ரேஷன் கடையில் பணி: நாளை நேர்முகத் தேர்வு ஆரம்பம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன்கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மண்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு ரேஷன்கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. அதற்கான நேர்முகத் தேர்வுகள் டிசம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை 5 நாள்கள் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
 இப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ள அனைவருக்கும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அவ்வாறு அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் தாங்கள் விண்ணப்பம் அனுப்பியதற்கான ஆதாரங்களுடன் 044 - 2723 8225 என்ற தொலைபேசி எண்ணிலோ, 96003 69414 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment